Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மஸ்கட் : மஸ்கட்டில் உள்ள இந்திய பள்ளிக்கூடத்தில் ஓமன் நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான ஓட்டப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள்
பல்வேறு வயதுடையவர்களுக்காக தனித்தனியே நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய தூதர் அமித் நாரங் வெற்றி கோப்பையை வழங்கி கௌரவித்தார். அப்போது அவர் தனது உரையில், இளம் வயதிலேயே விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்துடன் திகழ உதவியாக இருக்கும்.
மேலும் பள்ளிக்கூடத்தில் இந்த வாய்ப்பினை மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
ஓமன் நாடு முழுவதும் இந்திய பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ, மாணவியர் இந்த போட்டியில் பங்கேற்றனர். இந்த விழாவில் இந்திய பள்ளிக்கூட முதல்வர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.